திருப்பதியில் 16,000 ஆயிரம் லட்டு வழங்கியதில் முறைகேடு


திருப்பதியில் 16,000 ஆயிரம் லட்டு வழங்கியதில் முறைகேடு
x
தினத்தந்தி 18 Oct 2018 4:13 PM GMT (Updated: 18 Oct 2018 4:13 PM GMT)

திருப்பதியில் 16,000 ஆயிரம் லட்டு வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது.

சென்னை,

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 16,000 லட்டுகளை விற்றதில் முறைக்கேடு நடந்துள்ளது. பிரம்மோற்சவத்தின் 5-வது நாளான கடந்த 14-ம் தேதி கருட சேவையன்று லட்டுகளை விற்றதில் ஊழியர்கள் முறைகேடு செய்துள்ளது தெரியவந்தது. 

டிக்கெட் ஸ்கேனர் வேலை செய்யவில்லை எனக்கூறி பக்தர்களின் லட்டுகளை முறைகேடாக விற்றது தெரியவந்தது. இதனையடுத்து,  ஒப்பந்த ஊழியர்களின் லட்டு முறைகேடு தொடர்பாக தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story