சபரிமலை கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை அணுக முடிவு- தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்
சபரிமலை கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை அணுக முடிவு செய்து இருப்பதாக ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.
திருவனந்தபுரம்
சபரிமலை விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க தேவசம் போர்டுக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள திருவாங்கூர் தேவசம்போர்டு தலைமையகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் முடிந்ததும் சபரி மலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை அணுக தேவசம் முடிவு செய்து இருப்பதாக தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:-
தேவசம் போர்டு தனது மரியாதையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. எப்போது சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு செய்வது என்பது குறித்து டெல்லியில் உள்ள வக்கீல்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு செய்யப்படும். தேவசம் போர்டு எடுத்திருக்கும் முடிவுகளுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.நீதிமன்றத்தை நாட முடிவெடுத்திருப்பதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும். பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சபரிமலையில் நடைபெற்ற நிகழ்வுகள் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும்.என கூறினார்.
Related Tags :
Next Story