பா.ஜ.க. தலைவர் வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் கைது


பா.ஜ.க. தலைவர் வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2018 5:29 AM GMT (Updated: 22 Oct 2018 5:29 AM GMT)

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. தலைவர் வீட்டில் நடந்த சோதனையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தின் சாம்லி மாவட்டத்தில் பாரதீய ஜனதா தலைவர் ஒருவரது வீட்டில் சூதாட்டம் நடைபெறுகிறது என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அங்கு நடந்த சோதனையில் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து இந்த விவகாரம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story