டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்


டெண்டர் வழக்கு: தவறு இல்லையெனில்  முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க வேண்டும்
x
தினத்தந்தி 22 Oct 2018 10:26 AM GMT (Updated: 22 Oct 2018 10:26 AM GMT)

டெண்டர் வழக்கு தன் மீது தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க முன்வர வேண்டும் என டிடிவி தினகரன் கூறினார்.

பெங்களூர்

பெங்களூருவில் சசிகலாவை சந்தித்த பின் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

* சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதில் கேரள அரசு துணை நிற்க வேண்டும். ”மீடூ" கட்டாயம் நாட்டிற்கு தேவையான ஒன்று, எனவே சின்மயி - வைரமுத்து ஆகிய இருவரும் வழக்கை சந்தித்து தீர்வு காண்பது சிறந்தது. டெண்டர் வழக்கு  தன் மீது தவறு இல்லையெனில் முதல்வர் சிபிஐ விசாரணைக்கு உட்பட்டு, அதனை நிரூபிக்க முன்வர வேண்டும். என கூறினார்.

Next Story