அதிர்ச்சி சம்பவம் : 100 வயது பெண் 20 வயது வாலிபரால் பாலியல் பலாத்காரம்


அதிர்ச்சி சம்பவம் : 100 வயது பெண் 20 வயது வாலிபரால் பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 24 Oct 2018 12:20 PM GMT (Updated: 24 Oct 2018 12:20 PM GMT)

100 வயது முதிய பெண் 20 வயது வாலிபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் ஒரு வாலிபரால் 100 வயதான ஒரு பெண்  கற்பழிக்கப்பட்டதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாநிலத்தின் நாடியா மாவட்டம் சக்தாவில்  பதிவாகியுள்ளது. இதை தொடர்ந்து போலீசார் 20 வயது வாலிபரை கைது செய்து உள்ளனர். அவர் கலியாணி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு  2 வாரம் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து  கூறப்படுவதாவது:- 

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் சக்தாவில் கங்கா பிரசாத்பூர் கிராமத்திற்கு சென்ற அவிஜித் பிஸ்வாஷ் என்ற வாலிபர் அங்கு ஒரு அறையில் தனியாக இருந்த 100 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.  அந்த முதிய பெண்ணின்   அழுகை சத்தம் கேட்டு உறவினர்கள்  வந்து உள்ளனர். வாலிபர் அவிஜித்  பாதிக்கப்பட்டவரின் படுக்கையின் கீழே மறைந்து இருந்து உள்ளார்.

உறவினர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார்  வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்து உள்ளனர்.


Next Story