ஆந்திராவில் செம்மர கட்டைகளை கடத்த முயன்ற தமிழர்கள் 10 பேர் கைது


ஆந்திராவில் செம்மர கட்டைகளை கடத்த முயன்ற தமிழர்கள் 10 பேர் கைது
x
தினத்தந்தி 24 Oct 2018 9:45 PM GMT (Updated: 24 Oct 2018 8:48 PM GMT)

ஆந்திராவில் செம்மர கட்டைகளை கடத்த முயன்ற தமிழர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

நகரி,

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஜில்லேடு மந்தா, மந்தம் பாடு ஆகிய பகுதிகளில் உள்ள சேஷாசலம் மலை காடுகளில் இருந்து செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் வனத்துறை அதிகாரிகள் 2 இடங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஜில்லோடு மந்தா பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த தயாராக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 60 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள் 6 பேரை கைது செய்தனர். அதே போல் மந்தம் பாடு பகுதியில் 16 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட செம்மர கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி என்றும் கைது செய்யப்பட்ட 10 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story