குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுக்களை கொண்டு தங்கம் வாங்கிய ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு!


குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுக்களை கொண்டு தங்கம் வாங்கிய ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு!
x
தினத்தந்தி 25 Oct 2018 4:27 AM GMT (Updated: 25 Oct 2018 4:27 AM GMT)

குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுக்களை கொண்டு தங்கம் வாங்கிய ஜோடியை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.

லுதியானா,

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தங்க கடைக்கு சென்ற ஜோடி ஒன்று போலியான ரூபாய் நோடுக்களை கொண்டு ரூ. 2 லட்சத்திற்கு தங்கம் வாங்கி ஏமாற்றியுள்ளது. “ எண்டர்டைன்மெண்ட் பாங்க் ஆப் இந்தியா” என்று அச்சிடப்பட்ட சிறார்கள் விளையாடும் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து தங்கம் வாங்கியுள்ளது. இதுதொடார்பாக தங்க கடைகாரர் வர்மா பேசுகையில் “கடைக்கு வந்த ஜோடி தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டினார்கள். அவர்கள் 59 கிராம் தங்கம் வாங்கினார்கள். அவசர அவசரமாக பணத்தை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்கள். 

பணத்தை நான் சோதனை செய்த போது ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா என அச்சிடப்படும் இடத்தில், “ எண்டர்டைன்மெண்ட் பாங்க் ஆப் இந்தியா” என அச்சிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து பின்னால் சென்றேன், காரில் வந்தவர்கள் விரைந்து சென்றுவிட்டார்கள், என கூறியுள்ளார். இதுதொடர்பாக போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி சோதனையை மேற்கொண்டனர். அப்போது அதில் மோசடி செய்த ஜோடி சென்ற காரில் பதிவு எண் இல்லை என்பது தெரியவந்தது. போலீஸ் குற்றவாளிகளை வலை வீசி தேடிவருகிறது. இதுபோன்று பிற கொள்ளை சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரித்து வருகிறது.


Next Story