சிகரெட் பிரச்சினையில் ஆடைகளை கலைந்து போலீசாரை மிரட்டிய மாடல் அழகி
சிகரெட் பிரச்சினையில் ஆடைகளை கலைந்து உள்ளாடைகளுடன் போலீசாரை மாடல் அழகி ஒருவர் மிரட்டி உள்ளார்.
மும்பை
மும்பையிலுள்ள டோனி லோக்கண்ட்வாலா என்னும் விடுதியில் டேராடூனை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் தங்கி இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அந்த அழகி மிகுந்த போதையில் அந்த விடுதியின் பாதுகாவலர் அலோக்கை அழைத்து சிகரெட் வாங்கி வர சொல்லியுள்ளார். பாதுகாவலர் வாங்கி வர மறுத்ததால், ஆத்திரத்தில் மாடல் அழகி பாதுகாவலரை அரைந்துள்ளார். இதனால் பாதுகாவலர் போலீசை அழைத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த மாடல் அழகியை காவல் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டனர். வர மறுத்ததால் வலுக்கட்டாயமாக போலீசார் அழைத்துள்ளனர். ஆனால், மாடல் ஆழகியோ தன்னை அழைத்துபோக பெண் போலீசார் இல்லை என்பதால் காவல் நிலையத்தில் வந்து காலை புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளார். இருந்தாலும் போலீஸ் தரப்பில் இப்போதே வந்து புகார் அளிக்க கேட்டுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து கோபமான அந்த மாடல் அழகி தனது உடையை கலைந்து மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story