பாராளுமன்றத்தில் சர்தார் வல்லபாய் படேல் படத்திற்கு அத்வானி-சோனியா காந்தி மலர்த்தூவி மரியாதை


பாராளுமன்றத்தில் சர்தார் வல்லபாய் படேல் படத்திற்கு அத்வானி-சோனியா காந்தி மலர்த்தூவி மரியாதை
x
தினத்தந்தி 31 Oct 2018 10:45 AM GMT (Updated: 31 Oct 2018 10:45 AM GMT)

பாராளுமன்றத்தில் உள்ள சர்தார் வல்லாப் படேல் உருவபடத்திற்கு அத்வானி, சோனியா காந்தி உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

புதுடெல்லி,

‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்த சிலை நிறுவப்பட்டு உள்ளது. சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளான இன்று  அவரது முழு உருவ சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிலையில், சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி பாராளுமன்றத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாராளுமன்ற உறுப்பினர்கள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

Next Story