ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு


ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 1 Nov 2018 9:51 AM GMT (Updated: 1 Nov 2018 9:51 AM GMT)

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையிலான சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்,

பட்காம் மாவட்டம் கான்சாகிப் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்படி பாதுகாப்பு படையினர் சோதனையை மேற்கொண்டனர். அப்போது மறைந்து இருந்த பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுத்தனர். பாதுகாப்பு படையினர் சரண் அடைய எச்சரிக்கை விடுத்தும் கேட்காமல் அவர்களுடைய தாக்குதல் தொடர்ந்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடியை கொடுத்தனர். இருதரப்பு இடையே நடைபெற்ற சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய அடையாளம் இன்னும் அறியப்படவில்லை என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே சண்டை நடைபெற்ற இடத்தில் கும்பல் ஒன்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. மீடியா வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 

Next Story