காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை


காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 2 Nov 2018 12:03 PM GMT (Updated: 2 Nov 2018 12:03 PM GMT)

காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.



ஸ்ரீநகர், 

குப்வாராவின் சாகிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். பின்னர் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த பகுதியை போலீசார் சுற்றிவளைத்தனர். அவர்களை பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். உடனே போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டான். அதனை தொடர்ந்து மற்ற பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story