அமெரிக்க விமான நிலையம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும்; மிரட்டல் விடுத்த நபர் கைது


அமெரிக்க விமான நிலையம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும்; மிரட்டல் விடுத்த நபர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2018 9:46 AM GMT (Updated: 3 Nov 2018 9:46 AM GMT)

அமெரிக்காவின் மியாமி விமான நிலையம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல் விடுத்த 18 வயது வாலிபரை தீவிரவாத ஒழிப்பு படை கைது செய்துள்ளது.

லக்னோ,

அமெரிக்காவில் உள்ள மியாமி விமான நிலையம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல் விடுத்த மர்ம நபரை உத்தர பிரதேச தீவிரவாத ஒழிப்பு படை கைது செய்துள்ளது.

இந்த நபர் 1,000 அமெரிக்க டாலர் மதிப்பில் பிட்காயின்களை வாங்கி உள்ளார்.  ஆனால் சிலர் அவரை ஏமாற்றியுள்ளனர்.  இதனை தொடர்ந்து அமெரிக்க புலனாய்வு துறையான எப்.பி.ஐ.யிடம் அவர் புகார் அளித்துள்ளார்.

ஆனால் அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை.  இதனால் கடந்த அக்டோபர் 2ந்தேதி முதல் அக்டோபர் 31ந்தேதி வரை மியாமி விமான நிலையத்திற்கு பலமுறை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

அவர், ஏ.கே. 47 ரக துப்பாக்கி, எறிகுண்டு, தற்கொலை பெல்ட் அணிந்து வந்து ஒவ்வொருவரையும் கொல்வேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.

இதனை அடுத்து, அவரை ஐ.பி. முகவரியை கொண்டு கண்டறிந்த உத்தர பிரதேச தீவிரவாத ஒழிப்பு படையினர் பின்னர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story