தெலுங்கானாவில் வீட்டு பால்கனியில் பட்டம் பறக்க விட்ட 12 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு
தெலுங்கானாவில் வீட்டு பால்கனியில் பட்டம் பறக்க விட்ட 12 வயது சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் ரசூல்புரா பகுதியில் வசித்து வந்த சிறுவன் சஹீக் மோசின் (வயது 12). இந்த நிலையில் வீட்டில் இருந்த பால்கனியில் நின்று கொண்டு பட்டம் பறக்க விட்டு கொண்டு இருந்துள்ளான்.
இந்நிலையில் திடீரென அங்கிருந்து தவறி கீழே விழுந்துள்ளான். இதில் படுகாயமடைந்த மோசினை உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் மோசின் உயிரிழந்து விட்டான். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story