பயணிகளின் உடமைகளை ஏற்றாமல் ஜம்மு சென்ற கோ ஏர் விமானம், பயணிகள் அதிர்ச்சி


பயணிகளின் உடமைகளை ஏற்றாமல் ஜம்மு சென்ற கோ ஏர் விமானம், பயணிகள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 5 Nov 2018 6:43 AM GMT (Updated: 5 Nov 2018 6:43 AM GMT)

பயணிகளின் உடமைகளை ஏற்றாமல் ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு நகருக்கு கோ ஏர் விமானம் சென்றது.

ஸ்ரீநகர்,

ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு கோ ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ஜி8-213 என்ற விமானம் பயணிகளுடன் புறப்பட்டுச்சென்றது. விமானம், ஜம்மு நகரில் தரையிறங்கியதும் பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவெனில், பயணிகளின் உடமைகளை, விமானத்தில் ஏற்ற விமான ஊழியர்கள் மறந்துவிட்டனர்.  இதனால், தங்கள் உடமைகளை கைக்கு வராதது பற்றி, விமான ஊழியர்களிடம் பயணிகள் கேள்வி எழுப்பினர். 

இதையடுத்து, ஸ்ரீநகரில் இருந்து வரும் அடுத்த விமானத்தில் உடமைகள் கொண்டு வரப்படும் என்று பயணிகளிடம் விமான ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்துவிட்டு நாளையே உங்களது உடமைகள் கொண்டு வரப்படும் என்று விமான நிறுவன ஊழியர்கள் தெரிவித்ததாக பயணிகள் அதிருப்தியுடன் தெரிவித்தனர். 

Next Story