காஷ்மீரில் சோபியான் பகுதியில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் சோபியான் பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
சோபியான்,
காஷ்மீரில் சோபியான் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே காலை முதல் தீவிர துப்பாக்கி சண்டை நடந்து வந்தது.
இந்த மோதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் முகமது இத்ரீஸ் சுல்தான் மற்றும் அமீர் உசைன் ராவுத்தர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
இவர்கள் 2 பேரும் ஹிஜ்புல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பினை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அதன்பின்னர் என்கவுண்டர் நடந்த பகுதியில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story