ராகுல் டிராவிட் போல ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும் : ரகுராம் ராஜன்


ராகுல் டிராவிட் போல ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும் : ரகுராம் ராஜன்
x
தினத்தந்தி 7 Nov 2018 3:28 AM GMT (Updated: 7 Nov 2018 3:28 AM GMT)

ராகுல் டிராவிட் போல ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும், சித்து போல் இருக்க கூடாது என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,
 
ராகுல் டிராவிட், பொறுமையாக விளையாடி, தன் அணிக்கு வலுவான தளம் அமைத்துக் கொடுப்பது போல, ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும்''  என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே சமீப காலமாக கருத்து மோதல் அதிகரித்து வரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்  ரகுராம் ராஜன், “ கூறியிருப்பதாவது:- இரு தரப்பினரும் அவரவர் கருத்துக்களை கேட்க வேண்டும். மத்திய அரசு, கார் ஓட்டுனர் என்றால், ரிசர்வ் வங்கி, ஓட்டுனரை பாதுகாக்கும் 'பெல்ட்' எனலாம். அந்த பெல்ட் வேண்டுமா, வேண்டாமா என்பது, மத்திய அரசின் முடிவை பொறுத்து உள்ளது. பெல்ட் அணிந்து கார் ஓட்டினால், எதிர்பாராத நிகழ்வுகளின் போது தப்பிக்கலாம்.

மத்திய அரசுக்கு, இயல்பாகவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் சிந்தனை இருக்கும். அதேசமயம், நிதிச் சந்தையை வலுவாக வைக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உள்ளதால், மத்திய அரசின் கருத்தை ஏற்காமல் மறுக்க முடியும்.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், நின்று விளையாடி, தன் அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பார். அதுபோல, ரிசர்வ் வங்கி,அவ்வப்போதைய நிகழ்வுகளுக்கு கொள்கைகளை மாற்றாமல், அறிவார்ந்த சிந்தையுடன் செயல்படவேண்டும்.சித்துவைப்போல அதிரடியாக செயல்பட கூடாது” என்றார்.

Next Story