தீபாவளி பண்டிகை: இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் இனிப்புகள் பரிமாற்றம்


தீபாவளி பண்டிகை: இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் இனிப்புகள் பரிமாற்றம்
x
தினத்தந்தி 7 Nov 2018 8:04 AM GMT (Updated: 7 Nov 2018 8:04 AM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் இனிப்புகள் பரிமாறிக்கொண்டனர்.

ஸ்ரீநகர், 

தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின் போது, வாகா எல்லையில் பணியாற்றும் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் பரஸ்பரம் இனிப்புகள் பரிமாறிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி, இந்திய வீரர்கள் தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். 

Next Story