3 வயது குழந்தையின் வாயில் பட்டாசை வைத்து வெடித்த வாலிபர் : ஆபத்தான நிலையில் சிறுமி


3 வயது குழந்தையின் வாயில் பட்டாசை வைத்து  வெடித்த வாலிபர் : ஆபத்தான நிலையில் சிறுமி
x
தினத்தந்தி 8 Nov 2018 8:45 AM GMT (Updated: 8 Nov 2018 8:45 AM GMT)

3 வயது குழந்தையின் வாயில் பட்டாசை வைத்து வாலிபர் வெடித்ததால் ஆபத்தான நிலையில் சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

லக்னோ,

உத்திரபிரதேச மாநிலத்தில் 3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தீபாவளி அன்று வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் 3 வயது மகள் பட்டாசு விபத்தில் பலத்த காயமடைந்தார்.

அவரது வாய் சிதைந்த நிலையில் அலறித் துடித்தாள். அவளது வாயில் ஹர்பால் என்ற வாலிபர் பட்டாசு வைத்து வெடித்துள்ளார்.

உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் வாய்ப்பகுதியில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளன. தொண்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவளது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது.

இதுகுறித்து குழந்தையின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

Next Story