இந்திய ராணுவத்தில், முதல் முறையாக 3 புதிய ரக பீரங்கிகள்
இந்திய ராணுவத்தில், கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக புதிய ரக பீரங்கிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
நாசிக்,
1980களில் சுவீடன் தயாரிப்பான போபர்ஸ் பீரங்கிகள் ராணுவத்தில் இணைக்கப்பட்டன. இந்நிலையில், அமெரிக்க தயாரிப்பான எம்-777 அல்ட்ரா லைட் ஹோவிட்சர் (M777 Ultra-Light Howitzer) மற்றும் தென்கொரிய தயாரிப்பான கே9 வஜ்ரா-டி (K9 Vajra-T) ஆகிய பீரங்கிகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவ தளபதி பிபின் ராவத் முன்னிலையில், இந்த பீரங்கிகள் ராணுவத்தில் இணைக்கப்பட்டன.
இதேபோல, 2016 நவம்பரில் எம்777 அல்ட்ராலைட் ஹோவிட்சர் ரகத்தை சேர்ந்த 145 பீரங்கிகளை வாங்க 737 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 25 பீரங்கிகள் நேரடியாக இறக்குமதி செய்யப்படும். 120 பீரங்கிகள் மஹிந்திரா நிறுவனத்தின் கூட்டில் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும். 4 டன் எடை மட்டுமே கொண்ட இந்த எம்777 ரக பீரங்கிகளை ஹெலிகாப்டர் மூலம் மலைப்பாங்கான பகுதிகளுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.#WATCH Nasik: The M777 Ultra Light Howitzer which was inducted in the Army recently,in action. Defence Minister Nirmala Sitharaman and Army Chief General Bipin Rawat were also present on the occasion pic.twitter.com/2eZgP28QHb
— ANI (@ANI) November 9, 2018
Related Tags :
Next Story