ஜார்க்கண்டில் மாவோயிஸ்டு என கூறி ஆசிரியரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய நபர் கைது
ஜார்க்கண்டில் மாவோயிஸ்டு என கூறி பள்ளி ஆசிரியரிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
ஜாம்ஷெட்பூர்,
ஜார்க்கண்டில் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் போராஹத் கிராமத்தில் வசிப்பவர் வருண் மஹதோ என்ற துக்கு மஹதோ. இவர் கரியாமதி கிராமத்தில் உள்ள பள்ளிக்கூட உதவி ஆசிரியர் ஒருவரிடம் தன்னை மாவோயிஸ்டு என கூறி கொண்டு ரூ.25 லட்சம் பணம் தர வேண்டும். அப்படி பணம் தரவில்லை எனில் கொன்று விடுவேன் என்று கேட்டு மிரட்டியுள்ளார்.
கடந்த அக்டோபர் 8ந்தேதி ஆசிரியரின் வீட்டு சுவரில் போஸ்டர் ஒன்றும் ஒட்டியுள்ளார். அவரது வீட்டை வெடி வைத்து தகர்த்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதுபோன்று பலரை மிரட்டி பெற்ற ரூ.15 லட்சம் பணத்தில் வீடு ஒன்றும் கட்டியுள்ளார்.
அவர் கடந்த 3 முதல் 4 வருடங்கள் வரை இதுபோன்ற மிரட்டல் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆசிரியர் காவல்துறையிடம் அளித்துள்ள புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story