ரெயிலில் சிகரெட் புகைத்த நபரை கண்டித்த கர்ப்பிணி பெண் அடித்து கொலை
ரெயிலில் சிகரெட் புகைத்த நபரை கண்டித்த கர்ப்பிணி பெண் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார்.
ஷாஜகான்பூர்,
பீகாரில் பிரசித்தி பெற்ற சத் பூஜையில் கலந்து கொள்ள பஞ்சாபில் இருந்து பீகார் செல்லும் ஜாலியன்வாலா எக்ஸ்பிரெஸ் ரெயிலில் சின்னத்தேவி (வயது 45) என்பவர் தனது குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டு இருந்துள்ளார்.
அந்த பெட்டியில் பயணம் செய்த சோனு யாதவ் என்ற நபர் சிகரெட் புகைத்து உள்ளார். இதற்கு கர்ப்பிணியான அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் அந்த பெண்ணை சோனு அடித்து தாக்கியுள்ளார். இதனை அடுத்து ஷாஜகான்பூரில் ரெயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளியான சோனுவை கைது செய்துள்ளனர்.
Related Tags :
Next Story