ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி சாவு


ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி சாவு
x
தினத்தந்தி 11 Nov 2018 9:00 PM GMT (Updated: 11 Nov 2018 7:52 PM GMT)

ஆந்திராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி பலியாயினர்.

திருப்பதி,

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள மடிபாக்கா கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசா ரெட்டி (வயது 35). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை சீனிவாசா ரெட்டியின் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது வீட்டுக்குள் தீ எரிந்துகொண்டிருந்தது.

உடனே அவர்கள் தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் வீட்டுக்குள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதன்பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, படுக்கை அறையில் சீனிவாசா ரெட்டி, அவருடைய மனைவி, மகன் மற்றும் மகள் ஆகிய 4 பேரும் தீயில் கருகி இறந்து கிடந்தனர். கரிக்கட்டைகளாகி கிடந்த 4 பேரின் உடலை போலீசார் மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இது தீ விபத்தா? அல்லது அவர்கள் உடலில் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story