பெண் துன்புறுத்தல் விவகாரம்; இரு தரப்பினர் மோதலில் 9 பேர் காயம்


பெண் துன்புறுத்தல் விவகாரம்; இரு தரப்பினர் மோதலில் 9 பேர் காயம்
x
தினத்தந்தி 12 Nov 2018 9:36 AM GMT (Updated: 12 Nov 2018 9:36 AM GMT)

பெண் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் காயமடைந்து உள்ளனர்.

முசாபர்நகர்,

உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் கைக்கேரி கிராமத்தில் வசித்து வருபவர் பல்ராஜ்.  இவரது நண்பர் ஒருவர் அங்கிருந்த பெண் ஒருவரை துன்புறுத்தியுள்ளார்.  இதுபற்றி பல்ராஜிடம் பகதூர் சிங் என்பவர் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இந்த வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் பெரிய கம்புகள் மற்றும் ஆயுதங்கள் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.  இந்த சம்பவத்தில் 9 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

Next Story