குழந்தைகள் தினம்: நாக்பூர் சிறையில் கைதிகளுக்கு சிறப்பு சலுகை அளித்த சிறை நிர்வாகம்
மராட்டிய மாநிலத்தில் நாக்பூர் சிறையில் குழந்தைகள் தினத்தையொட்டி சிறைக்கைதிகளுக்கு அவர்களின் குழந்தைகளை பார்த்து பேச அனுமதி அளிக்கப்பட்டது.
நாக்பூர்,
நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு இன்று பிறந்த தினமாகும். ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாக்பூர் மத்திய சிறைத்துறை நிர்வாகம் கைதிகள் அவர்களின் குழந்தைகளை சந்தித்து பேச அனுமதி அளித்துள்ளது.
சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து, கைதிகள் மனைவி குழந்தைகளுடன் அமர்ந்து பாசத்துடன் பேசி மகிழ்ந்தனர். கைதிகள் குழந்தைகளுடன் பார்த்து பேசி கொஞ்சுவது பார்ப்பவர்களை கண் கலங்க வைத்தது.
கைதிகளை பார்த்து பேசுவதற்கு சிறைக் கண்காணிப்பாளர் ராணி போசலே குழந்தைகள் தின விழாவில் புதுமையாகக் கொண்டாடச் செய்துள்ளார்.
நாக்பூர் சிறையில் குடும்ப உறுப்பினர்கள் வந்தால் கம்பிவலைத் தடுப்புக்கு வெளியே நின்று தான் சிறைக்கைதிகளைச் சந்திக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story