மேற்கு வங்க மாநிலத்தில் ரூ.3 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்


மேற்கு வங்க மாநிலத்தில் ரூ.3 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Nov 2018 10:45 PM GMT (Updated: 18 Nov 2018 8:23 PM GMT)

மேற்கு வங்க மாநிலம் அவுராவில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகார் நோக்கி சென்ற காம்ருப் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மர்மநபர் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சிலிகுரி,

 மேற்கு வங்க மாநிலம் புது ஜல்பய்குரி ரெயில் நிலையத்திற்கு அந்த ரெயில் வந்தபோது மாறுவேடத்தில் இருந்த அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

அப்போது மேற்கு வங்க மாநிலம் கூக்ளியை சேர்ந்த ராஜூ ஆதாஷ் என்பவர் இடுப்பில் சுற்றி இருந்த பெல்ட் மற்றும் ஷூவில் தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 9 கிலோ எடையுள்ள, ரூ.3 கோடி மதிப்பிலான அந்த தங்க கட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் ராஜூ ஆதாஷை கைது செய்தனர்.

அந்த தங்க கட்டிகள் மியான்மரில் இருந்து மணிப்பூர் வழியாக கடத்தி வரப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.


Next Story