சத்தீஷ்காரில் கண்ணிவெடியில் சிக்கி போலீஸ்காரர் சாவு


சத்தீஷ்காரில் கண்ணிவெடியில் சிக்கி போலீஸ்காரர் சாவு
x
தினத்தந்தி 18 Nov 2018 11:00 PM GMT (Updated: 18 Nov 2018 9:48 PM GMT)

சத்தீஷ்கார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

சுக்மா,

நக்சலைட்டுகள் அங்கு அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட ரிசர்வ் படையை சேர்ந்த போலீசார் நேற்று சுக்மா மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது நக்சலைட்டுகள் மண்ணில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி திடீரென வெடித்ததில் 3 போலீசார் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சத்தீஷ்கார் மாநிலத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) 2-வது கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நடந்த இந்த சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story