முன்விரோதத்தில் ஒருவர் கொலை: 7 பேருக்கு தூக்குத் தண்டனை - உத்தரபிரதேச கோர்ட்டு தீர்ப்பு
முன்விரோதத்தில் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், 7 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து உத்தரபிரதேச கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
முசாபர்நகர்,
உத்தரபிரதேச மாநிலம் ஹர்சோலி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே முன்விரோதம் காரணமாக 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, கலவரத்தை ஏற்படுத்துதல், கொடுமையான ஆயுதங்களால் தாக்குதல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை ஹர்சோலி மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டில் நீதிபதி ராஜேஷ் பரத்வாஜ் முன்பாக நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட 7 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்தார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹர்சோலி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே முன்விரோதம் காரணமாக 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, கலவரத்தை ஏற்படுத்துதல், கொடுமையான ஆயுதங்களால் தாக்குதல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை ஹர்சோலி மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டில் நீதிபதி ராஜேஷ் பரத்வாஜ் முன்பாக நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட 7 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்தார்.
Related Tags :
Next Story