சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் 82 பேர் கைது


சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் 82 பேர் கைது
x
தினத்தந்தி 25 Nov 2018 9:00 PM GMT (Updated: 25 Nov 2018 7:23 PM GMT)

சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் 82 பேர் கைது செய்யப்பட்டனர்.

சபரிமலை,

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இதுவரை இல்லாத அளவுக்கு சபரிமலையில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் சபரிமலையில் அய்யப்பன் சன்னிதானத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள வாவர் மசூதி முன்பு நேற்று முன்தினம் இரவு திரண்ட அய்யப்ப பக்தர்கள் பலர் ‘நாமஜெபம்’ நடத்தினர். இதையடுத்து தடையை மீறி செயல்பட்டதாக கூறி ‘நாமஜெபம்’ நடத்திய அய்யப்ப பக்தர்கள் 82 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் மணியாரில் உள்ள போலீஸ் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



Next Story