மத்திய பிரதேசத்தில் மதியம் 12 மணிவரை 22 சதவீத வாக்குகள் பதிவு
மத்திய பிரதேசத்தில் மதியம் 12 மணிவரை 22 சதவீத வாக்கு பதிவு நடந்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய பிரதேச சட்டமன்றத்துக்கு இன்று ஒரே கட்டமாக வாகுப்பதிவு நடைபெறுகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள 227 தொகுதிகளில் காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள 3 தொகுதிகளில் மட்டும் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்திய பாதுகாப்பு படையினர் உட்பட 1.80 லட்சம் பேர் தேர்தலில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி வி.எல். காந்தாராவ் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தொழில் நுட்ப கோளாறுகள் மற்றும் புகார்கள் வந்த நிலையில், 70 வாக்கு பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு சீட்டு தணிக்கை செய்யும் இயந்திரங்கள் மாற்றப்பட்டு வேறு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த வாக்கு பதிவில் பணியில் இருந்த 2 அதிகாரிகள் மாரடைப்பினால் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் குணா மற்றும் மற்றொருவர் இந்தூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும். மதியம் 12 மணிவரை 22 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story