செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்


செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட்
x
தினத்தந்தி 29 Nov 2018 4:34 AM GMT (Updated: 29 Nov 2018 5:00 AM GMT)

ஹைசிஸ் உட்பட 31 செயற்கைக்கோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டா, 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் இன்று (வியாழக்கிழமை) காலை 9.57 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 31 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக  புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. 

இந்த ராக்கெட்டில் இஸ்ரோ தயாரித்த பூமியை கண்காணிக்கும் வகையில், விண்வெளியில் இருந்து மிக துல்லியமாக புகைப்படங்களை எடுக்கும் ‘ஹைப்பர் ஸ்பெக்ட்ரல் இமேஜிங் கேமராக்கள்’ கொண்ட ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ (HysIS) செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா, பின்லாந்து, மலேசியா, நெதர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளை சேர்ந்த 1 மைக்ரோ, 29 நானோ வகையை கொண்ட 30 வணிக ரீதியிலான செயற்கைகோள்களும் பொருத்தப்பட்டு உள்ளன. 

இதில் ‘எச்ஒய்எஸ்ஐஎஸ்’ செயற்கைகோள் பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் உயரத்திலும், வெளிநாடுகளைச்  சேர்ந்த செயற்கைகோள்கள் 504 கிலோ மீட்டர் உயரத்திலும் புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டன. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் 230.4 டன் எடை கொண்டதாகும். இது இந்தியாவின் 45-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.


Next Story