அசாம் மாநிலத்தில் இன்று நடந்த முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 65.5 சதவீதம் வாக்குப்பதிவு


அசாம் மாநிலத்தில் இன்று நடந்த முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 65.5 சதவீதம் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 5 Dec 2018 5:54 PM GMT (Updated: 5 Dec 2018 5:54 PM GMT)

அசாம் மாநிலத்தில் இன்று நடந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல்கட்ட தேர்தலில் 65.5 சதவீதம் வாக்குகள் பதிவானது.

கவுகாத்தி,
 
அசாம் மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் 15,899 பதவிகளுக்கு இன்று நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் போட்டியிட்ட 43,515 வேட்பாளர்களில் தங்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

அசாம் மாநிலத்தில் உள்ள 251 ஜில்லா பரிஷத் அமைப்புகள், 1304 பஞ்சாயத்து அமைப்புகள், 1304 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மற்றும் 13 ஆயிரத்து 40 கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 5 மற்றும் 9 தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடத்த அம்மாநில தேர்தல் கமிஷன் தீர்மானித்து இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்தலில் சுமார் 65.5 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்றைய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்த நிலையில், மத்திய அசாம் பகுதியில் கோலாகட் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடியின் அருகாமையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றிய முன்னாள் வீரர் கியானேந்திரா ராஜ்கோவா என்பவர் கொல்லப்பட்டார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

வரும் 9-ம் தேதி இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு முடிந்த பின்னர் இருகட்டங்களிலும் பதிவான வாக்குகள் அனைத்தும் 12-ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றே வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story