இன்று மாலை வரை தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிட தடை


இன்று மாலை வரை தேர்தல் கருத்து கணிப்புகளை வெளியிட தடை
x
தினத்தந்தி 7 Dec 2018 1:48 AM GMT (Updated: 7 Dec 2018 1:48 AM GMT)

இன்று மாலை 5.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.

போபால், 

சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 3 மாநில சட்டசபை தேர்தல் நிறைவடைந்திருக்கும் நிலையில், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் சட்டசபை தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது. 2 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், இன்று மாலை 5.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.

அந்தவகையில், மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக எந்தவிதமான கருத்துக்கணிப்பும் வெளியிடக்கூடாது என தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதைப்போல கருத்துக்கணிப்பு தொடர்பாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் நடைபெறும் தேர்தல் தொடர்பான போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

Next Story