வாக்குச்சாவடியில் ‘செல்பி’ எடுத்த இளைஞரை போலீஸ் கைது செய்தது!


வாக்குச்சாவடியில் ‘செல்பி’ எடுத்த இளைஞரை போலீஸ் கைது செய்தது!
x
தினத்தந்தி 7 Dec 2018 9:59 AM GMT (Updated: 7 Dec 2018 9:59 AM GMT)

தெலுங்கானாவில் வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் போது செல்பி எடுத்த இளைஞரை போலீஸ் கைது செய்துள்ளது.

ஐதராபாத்,

ஐதராபாத் ராஜேந்திர நகரில் வாக்குச்சாவடியில் வாக்களித்த இளைஞர் சிவ சிங்கர் உள்ளே செல்பி எடுத்துள்ளார். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இளைஞரை போலீஸ் காவலில் எடுத்துள்ளது. வாக்குச்சாவடியில் மொபைல் போனை பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. பொது உத்தரவை மீறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story