மகாராஷ்டிராவில் வேன் மீது லாரி மோதல்; 7 பெண்கள் உள்பட 10 பேர் பலி


மகாராஷ்டிராவில் வேன் மீது லாரி மோதல்; 7 பெண்கள் உள்பட 10 பேர் பலி
x
தினத்தந்தி 9 Dec 2018 1:26 AM GMT (Updated: 9 Dec 2018 1:26 AM GMT)

மகாராஷ்டிராவில் வேன் மீது லாரி மோதியதில் 7 பெண்கள் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

நாக்பூர்,

மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் 14 பயணிகளை ஏற்றி கொண்டு வேன் ஒன்று சென்றுள்ளது.  கோர்பனாவில் இருந்து வானி செல்லும் சாலையில் லாரி ஒன்று அதன் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 7 பெண்கள், வேன் டிரைவர், 3 வயது குழந்தை மற்றும் மற்றொரு நபர் என 10 பேர் பலியாகி உள்ளனர்.

இதில் 3 பேர் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.  ஒரு வயது குழந்தை காயம் எதுவுமின்றி தப்பியது.  சம்பவத்திற்கு பின்னர் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.  இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story