அரியானாவில் கெட்ட வார்த்தைகளை பேசிய மாணவர்களின் வாயில் செல்லோ டேப் ஒட்டிய ஆசிரியை
அரியானாவில் ஆசிரியை ஒருவர் கெட்ட வார்த்தைகளை பேசிய 2 மாணவர்களின் வாயில் செல்லோ டேப் ஒட்டியுள்ளார்.
குருகிராம்,
அரியானாவில் பள்ளி கூடம் ஒன்றில் கே.ஜி. மாணவ மாணவிகளுக்கு ஆசிரியை ஒருவர் வகுப்பு எடுத்து கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில், 2 மாணவர்கள் கெட்ட வார்த்தைகளில் பேசியுள்ளனர் என கூறப்படுகிறது.
அவர்களுக்கு தண்டனை வழங்க முடிவு செய்த ஆசிரியை செல்லோ டேப் கொண்டு 2 மாணவர்களின் வாயில் ஒட்டி உள்ளார். இந்த காட்சிகள் பள்ளி கூடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி உள்ளன.
இதனை தொடர்ந்து உடனடியாக ஆசிரியை பள்ளி கூடத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story