பா.ஜனதா 5 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் -சந்திரபாபு நாயுடு
பா.ஜனதா 5 ஆண்டுகளாக மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
அமராவதி,
5 மாநில தேர்தல்கள் முடிவு தொடர்பாக ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், பா.ஜனதா 5 ஆண்டுகளாக மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர். எனவே மாற்றத்தை நோக்கியுள்ளனர். பா.ஜனதாவிற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் எங்களுடன் உள்ளனர். பா.ஜனதாவிற்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்க ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வழிவகை செய்யும்,” என்று கூறியுள்ளார். மேலும் தெலுங்கானாவில் வெற்றி பெற்ற சந்திரசேகர ராவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story