மோடி அலை ஓய்ந்து விட்டது பஞ்சாப் மந்திரி சித்து சொல்கிறார்


மோடி அலை ஓய்ந்து விட்டது பஞ்சாப் மந்திரி சித்து சொல்கிறார்
x
தினத்தந்தி 11 Dec 2018 11:15 PM GMT (Updated: 11 Dec 2018 8:23 PM GMT)

சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

புதுடெல்லி, 

சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறித்து பஞ்சாப் மாநில மந்திரியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மோடி அலை ஓய்ந்துவிட்டது. மோடி அலை என்பது சோடா பாட்டிலில் உள்ள வாயு போன்றது. பாட்டிலை திறந்த 2 அல்லது 3 நிமிடங்களில் அது ஆவியாகிவிடும். அதுபோல் தான் மோடி அலை தற்போது முடிவுக்கு வந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story