மத்திய பிரதேச தேர்தல்; காங்கிரஸ் கட்சி 114, பா.ஜ.க. 109 இடங்களில் வெற்றி
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 114, பா.ஜ.க. 109 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை,
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.
இதில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்தது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) ஆட்சி நடத்தி வந்தது.
ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 2 மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி காங்கிரஸ்- தெலுங்குதேசம் கூட்டணியை வீழ்த்தி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டு உள்ளது.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் காங்கிரசிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி ஆட்சியை பறித்து உள்ளது. மத்திய பிரதேசத்தில் இழுபறி நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது. பா.ஜ.க. 109 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதேபோன்று பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. சுயேச்சைகள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
இங்கு மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆட்சி அமைக்க தேவையான 116 தொகுதிகளை எந்த கட்சியும் பெறவில்லை. சுயேச்சைகளின் ஆதரவை பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
Related Tags :
Next Story