‘‘காங்கிரசுடன் கூட்டணி நீடிக்கும்’’ தெலுங்கு தேசம் அறிவிப்பு
‘‘காங்கிரசுடன் கூட்டணி நீடிக்கும்’’ தெலுங்கு தேசம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்–தெலுங்கு தேசம் கூட்டணி தோல்வி அடைந்தது. இருப்பினும், இக்கூட்டணி நீடிக்கும் என்று தெலுங்கு தேசம் கட்சி மூத்த தலைவர் ரவீந்திர குமார் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ‘‘இது தேசிய அளவிலான கூட்டணி. தேசநலன் கருதியும், மாநில நலனை பாதுகாக்கவும் இக்கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதே எங்களது கொள்கை நிலைப்பாடு. இருப்பினும், ஆந்திராவில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்குவது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை’’ என்றார்.
Related Tags :
Next Story