மேகதாது அணை விவகாரம் : நாடாளுமன்றம் முன்பு அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்


மேகதாது அணை விவகாரம் : நாடாளுமன்றம் முன்பு அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2018 10:57 AM GMT (Updated: 13 Dec 2018 10:57 AM GMT)

மேகதாது அணை தொடர்பாக கர்நாடகாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதிக்கு தமிழகம், புதுச்சேரி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

புதுடெல்லி

மேகதாது அணை தொடர்பான வரைவு திட்ட அறிக்கை தயார் செய்ய, கர்நாடகாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதிக்கு தமிழகம், புதுச்சேரி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக, தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவுறுத்தலின் பேரில் நேற்றும், இன்றும் அ.தி.மு.க எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர். நேற்றும் இன்றும் நாடாளுமன்றம் முன்பு அ.தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். மேகதாது திட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழகம் பாலைவனம் ஆகும் என அ.தி.மு.க. எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

Next Story