தேர்தல் முடிவையடுத்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாத மோடி - ராகுல் காந்தி!


தேர்தல் முடிவையடுத்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாத மோடி - ராகுல் காந்தி!
x
தினத்தந்தி 13 Dec 2018 2:17 PM GMT (Updated: 13 Dec 2018 2:17 PM GMT)

பாராளுமன்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மகிழ்ச்சி பரிமாறிக் கொள்ளவில்லை.

புதுடெல்லி,

2001-ல் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  5 மாநில தேர்தலை அடுத்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. அவர்கள் பேசிக்கொள்ளவும் இல்லை. இருவரும் ஒதுங்கியே நின்றனர். 
பிரதமர் மோடி முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங்கிடம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார். மத்திய அமைச்சர்கள் விஜய் கோயல், ராம்தாஸ் அத்வாலே ராகுல் காந்தியுடன் கை குலுக்கிக்கொண்டனர். 

மாநிலங்களவை சபாநாயகர் எம். வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். 


Next Story