அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு


அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அமளியால்  மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 17 Dec 2018 6:05 AM GMT (Updated: 17 Dec 2018 6:05 AM GMT)

அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை இன்று காலை கூடியதும்,  மேகதாது விவகாரத்தை மையப்படுத்தி அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.  ரபேல் விவகாரத்தை முன்னிறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

அதேபோல், மாநிலங்களவையிலும் மேற்கூறிய விவகாரங்கள் எதிரொலித்தது. அவையில் கடும் கூச்சல், குழப்பம் நீடித்ததால்,  மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

Next Story