உத்தரகாண்டில் ஏற்பட்ட நில சரிவில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலி; 4 பேர் காயம்
உத்தரகாண்டில் ஏற்பட்ட நில சரிவில் சிக்கி 8 தொழிலாளர்கள் பலியாகினர்.
டேராடூன்,
உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ரிஷிகேஷ்-கேதர்நாத் தேசிய நெடுஞ்சாலையில் பன்ஸ்வாடா பகுதியருகே சார் தாம் என்ற கட்டுமான பணி நடந்து வந்தது.
இந்த நிலையில் இங்கு திடீரென நில சரிவு ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 8 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இந்த சம்பவத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்து மூத்த அதிகாரிள் அங்கு உடனடியாக சென்றனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story