1,300 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த தொழிலதிபர் உருக்கமான தகவல்


1,300 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த தொழிலதிபர் உருக்கமான தகவல்
x

6 வருடங்களாக 1,300 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த தொழிலதிபர் குறித்த உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூரத்

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மஹேஷ் சவானி 261 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து அசத்தியுள்ளார். வைர வியாபாரியான மஹேஷ், சூரத்தில் உள்ள பிரம்மாண்ட அரங்கில் நேற்று திருமணம் செய்து வைத்துள்ளார்.

தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் சீதனமாக வழங்கப்பட்டன. கடந்த 2012-ம் ஆண்டு முதல் 6 வருடங்களாகத் தந்தையில்லாமலிருக்கும் ஏழைப்பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் மஹேஷ். சூரத்தில் நடந்த நேற்றைய திருமணத்தில் மஹேஷ் ஒரு தந்தையாக இருந்து அனைத்து சடங்குகளையும் செய்து வைத்துள்ளார்.2008-ம் ஆண்டு மஹேஷ்க்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணத்துக்கு முன்பே அவரின் தந்தை உயிரிழந்துள்ளார். 

தந்தையில்லாமல்தான் அவருக்குத் திருமணம் நடந்துள்ளது. இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட அவர், தந்தையில்லாத பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, இதுவரை 1,300 தம்பதிகளுக்குத் திருமணம் செய்துவைத்துள்ளார். சூரத்தில் நேற்று நடைபெற்ற திருமணத்தின்போது, பெண் ஒருவர் தன்னையறியாமல் கண்ணீர் சிந்தினார். இதைப் பார்த்த மஹேஷ் தந்தையாக இருந்து அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைத்தார். இந்தக் காட்சிகள் நெஞ்சை உருக்கும் விதமாக அமைந்துள்ளன.

Next Story