மத்திய பிரதேசத்தில் 28 பேர் கொண்ட மந்திரிசபை பதவி ஏற்பு 22 பேர் புதுமுகங்கள்


மத்திய பிரதேசத்தில் 28 பேர் கொண்ட மந்திரிசபை பதவி ஏற்பு 22 பேர் புதுமுகங்கள்
x
தினத்தந்தி 25 Dec 2018 11:00 PM GMT (Updated: 25 Dec 2018 10:26 PM GMT)

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மந்திரி சபை நேற்று பதவி ஏற்றுக் கொண்டது. மாநில தலைநகரான போபாலில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடந்தது.

போபால்,

கவர்னர் ஆனந்திபென் படேல் 28 மந்திரிகளுக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் முதல்–மந்திரி கமல்நாத் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பதவி ஏற்ற 28 மந்திரிகளும் கேபினட் அந்தஸ்துடன் பொறுப்பு ஏற்றுள்ளனர். அவர்களில் 22 பேர் முதன்முறையாக மந்திரிகளாக பதவி ஏற்று உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் ஆவார்கள். 6 மந்திரிகள் பழைய முகங்கள் ஆவார்கள்.


Next Story