மேகதாது அணை திட்டம் இரு மாநில நலனுக்கான திட்டம் என பிரதமரிடம் வலியுறுத்தினேன்-குமாரசாமி
மேகதாது அணை திட்டம் இரு மாநில நலனுக்கான திட்டம் என பிரதமரிடம் வலியுறுத்தினேன் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறினார்.
புதுடெல்லி,
கர்நாடக முதல்வர் குமாரசாமி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். மேகதாது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமரை சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேகதாது அணை திட்டம் இரு மாநில நலனுக்கான திட்டம்; தமிழகம், கர்நாடக அரசுகள் பேசி தீர்வு காண்பது பற்றி பிரதமரிடம் வலியுறுத்தினேன். மேகதாது திட்டம் இரு அரசுகள், மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story