மும்பையில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள போதை மருந்து பறிமுதல்


மும்பையில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள போதை மருந்து பறிமுதல்
x
தினத்தந்தி 28 Dec 2018 9:35 AM GMT (Updated: 28 Dec 2018 10:59 AM GMT)

மும்பையில் ரூ.1,000 கோடி மதிப்புள்ள 100 கிலோ போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மும்பை

மும்பையில் 100 கிலோ எடையுள்ள  ரூ.1,000 கோடி மதிப்பு போதைபொருளை போதை தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். 

இது குறித்து போதை தடுப்பு பிரிவு டிஜிபி ஷிவ்தீப் லேண்டே கூறியதாவது:-

ஒரு அதிரடி சோதனையில் 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ போதை மருந்தை பறிமுதல் செய்து உள்ளோம். இது மெக்சிகோவிற்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்தது ஆகும். போதை மருந்து கடத்தல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story