திரிபுரா: உள்ளாட்சி இடைத்தேர்தல் - பா.ஜனதா வெற்றி


திரிபுரா: உள்ளாட்சி இடைத்தேர்தல் - பா.ஜனதா வெற்றி
x
தினத்தந்தி 28 Dec 2018 5:16 PM GMT (Updated: 28 Dec 2018 5:16 PM GMT)

திரிபுராவில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில், பா.ஜனதா அபார வெற்றிபெற்றது.

அகர்தலா,

பா.ஜனதா ஆளும் திரிபுராவில் 7 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட 67 இடங்களுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. இதில் 66 இடங்களை கைப்பற்றி பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. குறிப்பாக அகர்தலா மாநகராட்சியில் 4 வார்டுகளை பா.ஜனதா கைப்பற்றியது.

இதைப்போல பனிசாகர் நகராட்சியில் தேர்தல் நடந்த 11 வார்டுகளில் 10-ல் பா.ஜனதா வெற்றி பெற்றது. மீதமுள்ள ஒரு இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கைப்பற்றியது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியினர் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் பெற்ற வெற்றிக்கு, திரிபுரா மாநில முதல்-மந்திரி பிப்லாப் குமார் தேபுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன

Next Story