மும்பை: கட்டுமானப்பணி நடைபெற்று வந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து


மும்பை: கட்டுமானப்பணி நடைபெற்று வந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 29 Dec 2018 4:26 AM GMT (Updated: 29 Dec 2018 4:26 AM GMT)

மும்பையின் கமலா மில்ஸ் வளாகம் அருகே கட்டுமானப்பணி நடைபெற்று வந்த கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

மும்பை, 

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள கமலா மில்ஸ் வளாகத்தின் அருகே  இருக்கும் கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுமானப்பணி நடந்து கொண்டு இருந்த அந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க 4 தீ அணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்தனர். இந்த தீ விபத்தால் உயிர்ச்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. 

கடந்த ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி, கமலா மில்ஸ் வளாகத்தில் இருந்த உணவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 14 பேர் பலியாகி இருந்தனர். மும்பையில், நடப்பு வாரத்தில் மட்டும் 3-வது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

வியாழக்கிழமை செம்பூர் பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகினர். அதேபோல், வியாழக்கிழமை காலை டாங்கிர் ஜெயில் சாலையில் உள்ள பேண்டி பஜார் பகுதியில்  தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. 

Next Story