உயர் அதிகாரிகள் மீது தூர்தர்‌ஷன் பெண் ஊழியர்கள் பாலியல் புகார்


உயர் அதிகாரிகள் மீது தூர்தர்‌ஷன் பெண் ஊழியர்கள் பாலியல் புகார்
x
தினத்தந்தி 29 Dec 2018 10:50 PM GMT (Updated: 29 Dec 2018 10:50 PM GMT)

டெல்லி தூர்தர்‌ஷனில் பணிபுரியும் 2 பெண் ஊழியர்களும், போபால் தூர்தர்‌ஷன் பெண் ஊழியர் ஒருவரும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

புதுடெல்லி,

தாங்கள் 3 பேரும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் என்றும், தங்கள் ஒப்பந்தத்தை நீட்டிக்க அதிகாரிகளை நாடியபோது அவர்கள் பாலியல் ரீதியாக தங்களை அணுகியதாகவும் புகார் செய்தனர். 3 பேருக்கும் இது 2015 உள்பட பல்வேறு காலகட்டங்களில் நடந்துள்ளது.

இதுகுறித்து தூர்தர்‌ஷனில் உள்ள பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுவிடம் புகார் செய்துள்ளோம். அவர்கள் விசாரித்து சரியான பரிந்துரைகளை வழங்கினார்கள். ஆனாலும் அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் புகார் செய்தனர். இதுபற்றி தூர்தர்‌ஷன் நிர்வாகத்திடம் கேட்டபோது, இந்த பிரச்சினை தொடர்பாக மேலும் சில தகவல்களை திரட்டி வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.


Next Story